Skip to main content

பிவிஆர்- ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பு!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

PVR-Inox Companies merger

 

நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பட்டுள்ளதாக பிவிஆர் லிமிடெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டதால், அதனை சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, திரையரங்குகளின் உரிமையாளர்களும் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். இந்த நிலையில், கரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு, அதன் வியாபாரம் பழைய நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. 

 

இச்சூழலில், பிவிஆர் லிமிடெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (27/03/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள திரைகளின் பிராண்டிங்குடன் பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என பெயரிடப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலி, செயல் இயக்குநராக சஞ்சய் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் எஸ்விபி கம்பெனியின் செயலாளர் முகேஷ்குமார் (SVP Company Secretary & Compliance Officer). 

 

பிவிஆர் லிமிடெட் நிறுவனம் தற்போது 73 நகரங்களில் உள்ள 181 இடங்களில் 871 திரையரங்குகளை நடத்தி வருகிறது. ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனம் 72 நகரங்களில் 160 இடங்களில் 675 திரைகளை இயக்குகிறது. ஒருங்கிணைந்த நிறுவனம் 109 நகரங்களில் உள்ள 341 இடங்களில் 1,546 திரைகளுடன் மிகப்பெரிய திரைப்பட கண்காட்சி நிறுவனமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பீஸ்ட்- கே.ஜி.எஃப் 2 போட்டிக்கு இடையே சிம்பு படம் செய்த மேஜிக்!

Published on 16/04/2022 | Edited on 17/04/2022

 

SDR at PVR Theater between Beast-KGF2. Picture!

 

சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். புதிதாக வெளியாகும் அனைத்து படங்களும் இந்த திரையரங்குகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர்- 2 படம், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பியது பிவிஆர் திரையரங்குகளின் நிர்வாகம். 

 

அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி, நடிகர் சிம்பு நடிப்பில், கடந்த 2010- ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தனது திரையரங்குகளில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்ப தொடங்கியது பிவிஆர் நிர்வாகம். இப்படத்தை காண நாள்தோறும் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தை பிவிஆர் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், பீஸ்ட், கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு மத்தியிலும் 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இரண்டு மாதங்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

 

Next Story

பிரபல நிறுவனம், திரையரங்கில் ஒத்திகை!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

pvr


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. 
 


கரோனா பாதிப்பு இன்னும் குறையவே இல்லாத காரணத்தால் மீண்டும் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் திரும்புவார்களா, அரசு அனுமதி வழங்குமா என்ற சந்தேகத்தில் பலரும் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல மல்டி ப்ளக்ஸ் நிறுவனமான பி.வி.ஆர். குழுமம், கரோனா தொற்று முடிவடைந்தவுடன் மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஒத்திகை செய்து பார்த்துள்ளது. அருகருகே அமராமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, ஒரு சீட்டிற்கு மற்றொரு சீட்டிற்கும் இடையில் நீளமான தடுப்பு வைக்கபட்டு பல முறைகளைச் செயல்படுத்தி ஒத்திகை பார்த்துள்ளது.