punjab minister balbir sidhu tested positive

ராகுல் காந்தியுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் பல்பீர் சிங் சித்துவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணி மேற்கொண்டார் ராகுல் காந்தி. இதில் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பல்பீர் சிங் சித்துவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment