Advertisment

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு... கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு...

punjab extends lockdown

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 3- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க முதல்வர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, மே 3- ஆம் தேதிக்குப் பின்னரும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இந்தக் காலகட்டத்தில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Punjab corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe