Skip to main content

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்'- பஞ்சாப் அரசு முடிவு!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்குவதற்கு, பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக அம்ரீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நேற்று (19/09/2019) மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

punjab cabinet decide 11th, 12th schools study girl students govt has provide smart phone


 

இதன்படி, முதல் கட்டமாக நடப்பு கல்வியாண்டு முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவிகளுக்கு மட்டுமே, அரசின் இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்று அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
 

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திட்டமிட்டபடி இன்றே தேர்வுகள்; குழம்பிய பள்ளி மாணவர்களுக்கு அரசு விளக்கம்

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Government announcement that supplementary exams will be held today for students who have failed in class 12th

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

 

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது. தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதேசமயத்தில் 47,973 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாமல் தோல்வி அடைந்திருந்தனர்.

 

தேர்வில் தோற்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான துணைத் தேர்வுகள் உடனடியாக நடத்தப்பட்டு முடிவுகளும் உடனடியாக வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதேசமயத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

 

அதன்படி ஜூன் 19 தேதி (இன்று) தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் இன்று துணைத் தேர்வு நடக்குமா என சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை உடனடியாக தெரிந்துகொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவித்துள்ளது.

 

 

 

Next Story

முதல்வரின் அறிவிப்பு; ஹெலிகாப்டரில் பறந்த பழங்குடியின மாணவர்கள்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

notification of the chief minister tribal students who flew in a helicopter

 

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் இருந்து வருகிறார். மாநிலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

 

அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்து இருந்தார். இதையடுத்து நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வந்தது.

 

இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற பிற்படுத்தப்பட்ட பழங்குடியின குழந்தைகளுக்காக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிரேம்சாய் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “10 மற்றும் 12வது படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் வந்தால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம் என முதல்வர் பூபேஷ் பாகேல் உறுதியளித்தார். அதன்படி இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.