Skip to main content

"அனைவரது ஒத்துழைப்புடன் தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும்" -முதல்வர் ரங்கசாமி பேட்டி!

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

"Puducherry will develop only with everyone's cooperation" - Principal Rangasamy interview!

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " சட்டமன்றத்தில் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பவும் பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு தீபாவளி நலத்திட்ட பொருட்கள் நேரடி பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

 

தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி 10 கிலோ, 2 கிலோ சர்க்கரைக்கான தொகையும் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. அதோடு 4 மாத கால இலவச அரிசிக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 43 கோடியே 85 லட்சம் லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ 3,500 வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும். இவையும் பணப்பரிமாற்றம் மூலமே வழங்கப்படும்.

 

புதுச்சேரியில் பால் உற்பத்தியை பொருத்தமட்டில் தன்னிறைவு இல்லை, அண்டை மாநிலங்களில் இருந்தும் பால் பெறுகிறோம். கர்நாடகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நமக்கு பால் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது தட்டுப்பாடு நீங்கியுள்ளது. புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு தீர்ந்து விட்டது. அரசு நிறுவனமான பாண்லே தனியார் மயமாக்கப்படாது. நிச்சயமாக கூட்டுறவு நிறுவனமாக தொடரும். புதுச்சேரி வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ 2,000 கோடி நிதி வேண்டும் என பிரதமரிடமும் கேட்டிருந்தோம்.

 

அவர்கள் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் இந்த தொகை தருவதாக சொல்லி இருந்தார்கள். அதற்கான கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளரும் நிதி செயலாளரும் பங்கேற்றார்கள். இதில் ரூ 1400 கோடி கூடுதலாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு, பென்ஷன் அரியர்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்த தேவையான நிதி ஆகியவை கிடைக்கும். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 400 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கும்.

 

மழை காலத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவில் தேங்காது" என்றார்.

 

அப்பொழுது "அரசு நிர்வாகத்தில் ஆளுநர் சபாநாயகரின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறதே...?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அரசு நிர்வாகத்தில் ஆளுநர், சபாநாயகர் தலையீடு இல்லை. அனைவரது ஒத்துழைப்புடன் தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும்" என்றார். 
.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.