Skip to main content

அடுத்தடுத்து சரியும் 'விக்கெட்டுகள்' - அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்!

Published on 15/02/2021 | Edited on 16/02/2021

 

 

puducherry union one more mla resignation

 

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் கீழ் வருகிறது, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியைச் சேர்ந்தவர் மல்லாடி கிருஷ்ணராவ். இவர் 1996- ல் இருந்து ஏனாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். இதுவரை தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்.  மேலும் புதுச்சேரி அமைச்சரவையில் மூன்று முறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

 

கடந்த 2016- ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரைவையில் சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்த நிலையில், கடந்த மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரை அடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமியிடம் அளித்தார்.
 

puducherry union one more mla resignation

 

இந்நிலையில் இன்று (15/02/2021) அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதேபோல், தனது உறுப்பினர் பதவி ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ஏற்கனவே, அமைச்சராக இருந்த நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதேபோல், பாகூர் எம்.எல்.ஏ தனவேலுவின் எம்.எல்.ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

 

மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 -லிருந்து 11 ஆகக் குறைந்துள்ளது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வில் 3 உறுப்பினர்களும், சுயேச்சையாக ஒரு உறுப்பினரும் உள்ளதால், பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 15 ஆக உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்களும், அ.தி.மு.க. கட்சியில் 4 உறுப்பினர்களும், நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக 3 பேர் என 14 சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.