2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அதையடுத்து தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சிப் பணிகளை தீவிரமாக ஆற்ற வேண்டி இருப்பதால் கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டுமென மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் சஞ்சய்தத் ஆகியோரிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒப்புதல் அளித்ததன் பேரில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஏ.வி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.வி.சுப்பிரமணியன் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர் ஆவார். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் ஒருமுறை அமைச்சராகவும், ஒருமுறை சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.