Skip to main content

சனீஸ்வரன் கோவிலில் உள்ள நளன் குளத்தில் குளிக்க தடை!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

உலகத்தையே பீதியடைய செய்துள்ள கரோனா வைரஸின் எதிரொலியால் சனீஸ்வரன் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்துள்ளது காரைக்கால் மாவட்ட நிர்வாகம்.
 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்களும், அந்தந்த நாட்டு அரசாங்கமும் பீதியில் உறைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

puducherry thirunallar temple peoples over coronavirus issues

அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நல்ல வழி துறையின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்தர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்தார்.
 

திருநள்ளார் கோயிலில் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் நேற்றும், இன்றும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கோயில்களில் கூட்டத்தை சமாளிக்கவும், கரோனா தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் வாயிலில், சோப்பு மற்றும் சுடுநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் முன்பு கைகளை சோப்புப் போட்டுக் கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே நுழையும் படி செய்தனர்.
 

சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு உள்ளே நுழைய வேண்டாம் என்று தடுக்கப்பட்டது. இதேபோல் பிரசித்திபெற்ற நளன் குளத்திலும் தடைகளை மீறி குளிக்க பொதுமக்கள் முண்டியடித்ததால், குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. இருந்தும் குளத்தின் படிக்கட்டுகளில் இருந்த தண்ணீரை பக்தர்கள் பலர் பாட்டிலில் பிளாஸ்டிக் கப்புகளில் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டு சென்றனர்.
 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.