Advertisment

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... பந்தகால் நடப்பட்டது...

PUDUCHERRY, THIRUNALLAR SANEESWARAN TEMPLE FESTIVAL

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பந்தகால் நடப்பட்டது. தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் நடந்த பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சியில் அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன், கோயில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Advertisment

கரோனா அச்சறுத்தல் காரணமாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்ளை அனுமதிக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் கூறுகின்றன. அதேபோல், வீட்டிலிருந்தவாறு விழாவை பக்தர்கள் காணும் வகையில் யூடூப் மூலமும், இணையதளம் மூலமும் சிறப்பு நேரலை செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

வரும் டிசம்பர் மாதம் 27- ஆம் தேதி காலை 05.22 மணிக்கு தனுஷ் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார் சனிபகவான்.

தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதிகொண்டுள்ள சனீஸ்வரர் கோயிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தான் சனிபெயர்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Festivals Puducherry temples thirunallar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe