Skip to main content

கோவில் திருவிழாவில் வெடிகுண்டு வீச்சு...ரவுடி வெட்டி கொலை...புதுவையில் பரபரப்பு!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

புதுச்சேரி வாணரப்பேட்டை தோப்பு பகுதியில் எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக திருவிழா  நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு  தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி எல்லை காளியம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிழா நடந்து கொண்டிருந்தது. விழாவை காண அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழாவில் ஆயுள் தண்டனை முடிந்த 6 மாதத்திற்கு முன்பு விடுதலையான பிரபல ரவுடி குமார் (எ) சாணிக்குமார் ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. 

 
இந்நிலையில் நேற்று இரவு 10.00 மணியளவில் ஏ.எப்.டி திடல் பகுதியில் இருந்து முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், அந்த பிரபல ரவுடியை கொல்ல சதிதிட்டம் தீட்டி கோவில் திருவிழாவில் பங்கேற்ற ரவுடியை நோக்கி  நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். ஆனால் மர்ம கும்பல் வீசிய நாட்டு வெடிகுண்டு குறி தவறி கோவில் சுவற்றில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் கோவிலில் விழாவில் பங்கேற்ற நபர் ஒருவர் காயமடைந்தார். பின்னர் அந்த ரவுடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

PUDUCHERRY TEMPLE FESTIVAL INCIDENT ROWDY ISSUES POLICE INVESTIGATION


மேலும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்களும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். திருவிழாவின்போது கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் ரவுடி குமாரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் அவரது வீட்டின் அருகே மறைந்திருந்து, அவரை மடக்கி வெட்டிக்கொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் அங்கேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த காவல்துறை சடலத்தை கைப்பற்றி ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குமாரை கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்


இதேபோல் புதுச்சேரியின் சமூகநலத்துறை அமைச்சரான கந்தசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று காலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக காவல் நிலைய அதிகாரிகள் உப்பளத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.



மேலும் மோப்ப நாய்கள் வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டு அமைச்சர் கந்தசாமி இல்லத்தில் முழுவதுமாக சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் கந்தசாமி தனது இல்லத்திற்கு வந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கந்தசாமி, தனக்கு மிரட்டல் விடும் அளவிற்கு யாரும் எதிரிகள் இல்லை எனவும் தொலைபேசி அழைப்பு விடுத்த மர்ம நபரை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.