Skip to main content

"புதுச்சேரி மாநில அரசின்  நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்" - முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 05/07/2020 | Edited on 06/07/2020
"Puducherry state government's financial report to be filed soon" - Narayanaswamy Interview!

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

"புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குணமடைந்து வருவோர் 53 சதவீதமாக உள்ளது. இறப்பு 1.4 சதவீதமாக உள்ளது.  கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஏற்பாடுகள் சரியில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். உண்மைக்குத் தவறான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையை பொறுத்தவரை பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கரோனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கினால் கரோனா நோய்த் தொற்று குறையும் என்பது ஒரு அம்சம்தான். மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடித்தால் தான் குறையும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். மக்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை. தேநீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்க கூடாது. கும்பல் கூடுவது, வெளியில் தேவையில்லாமல் நின்று பேசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேநீர் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் மத்திய அரசு கரோனா தடுப்பிற்காக "கோவாக்சின்" என்ற மருந்தைக் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இந்திய மருத்துவக் கழகம் தற்போது மனிதர்களுக்குக் கொடுத்து பரிசோதிக்க உள்ளது. ஆனால் பல மருத்துவ வல்லுநர்களின் கருத்து 9 மாதங்களுக்கு பரிசோதனை செய்தபிறகே பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என்கின்றார்கள். மத்திய அரசு அது முழுமையான தீர்வு என்றால் மட்டுமே  அதனைக் கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு  இன்னும் ஓரிரு நாளில் அனுமதி அளிக்க உள்ளது. அதனால் அரசு அதற்கான ஆயத்த வேளைகளில் உள்ளது. துணை நிலை ஆளுநரிடம் அனுப்பி பல கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பினார். புதுச்சேரி அமைச்சரவையால் காலதாமதம் இல்லை. விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

பாரத பிரதமர் மோடிக்கு நிலுவையில் உள்ள GST நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் கடிதம் எழுதி இருந்தேன். இதுவரை பதில் இல்லை. பட்ஜெட்டிற்கு பின்பு நிதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நாராயணசாமி அதில் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.