Advertisment

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்!

puducherry redyarpalayam incident Public road blocks

Advertisment

புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாக்கியலட்சுமி (15) வயது சிறுமி, செந்தாமரை (72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர்.

puducherry redyarpalayam incident Public road blocks

Advertisment

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

அதே சமயம் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றது. அதோடு வீட்டுக் கழிவறைகளுக்குத் தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த கோரி கோரி அப்பகுதி மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

puducherry redyarpalayam incident Public road blocks

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கழிவுகளை வெளியேற்ற புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Road police Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe