Skip to main content

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம், ஓய்வூதியம் கோரி தொடர் போராட்டம்! 

Published on 06/09/2020 | Edited on 06/09/2020

 

 

puducherry private schools teachers

புதுச்சேரி மாநிலத்திலுள்ள 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 450 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். மேலும் 400- க்கும் மேற்பட்ட ஓய்வூதிதாரர்களும் ஓய்வூதியம் வாங்கி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஒன்பது மாதங்களாக ஊதியம்  மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

 

அதையடுத்து நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு துணைதலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமையில் நேற்றுமுன்தினம் (04.09.2020) புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில் நேற்று (05.09.2020) ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொறுப்பாளர்கள்  T.R .சேஷாசலம், சீத்தாலட்சுமி, வின்சென்ட், கோபால், அருள்ராஜ், சேகர், பெருமாள், பிரிட்டோ, பிரடெரிக், வெனிஸ், நிக்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதுகுறித்து மார்ட்டின் கென்னடி கூறும்போது, "புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்வி சட்டம்-1987 மற்றும் கல்வி விதிகள் 1996 ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றது. அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளும், அவர்களுக்கு இணையாக நிதி உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று இச்சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் சமீப காலமாக கல்வித்துறையும், அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  செயல்படுகின்றனர். தவறான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பியதன் காரணமாக மாதந்தோறும் அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வரவேண்டிய ஊதியம் 9 மாதமாக தடைப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இந்த போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒன்றரை மாத ஊதியம் கோரி அனுப்பப்பட்ட சம்பள கோப்பு துணை நிலை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.

puducherry private schools teachers

கடந்த 20 மாதங்களாக சம்பள கோப்பு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதே வகையில் இந்த கோப்பும் அனுப்பபட்டது. நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகளிடமிருந்து தேவையான தகவல்களை கேட்டு பெறுவதற்கு ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் முழு உரிமையும், அதிகாரமும் உண்டு. ஆனால், அந்த தகவல்களுக்காக ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்சனை நிறுத்தி வைப்பது நியாயமானது அல்ல. நிதி உதவி பெறும் பள்ளிகள் புதுவையை விட்டு எங்கேயும் சென்றுவிடப் போவதில்லை. 

 

எவ்வளவு தகவல்கள் வேண்டுமானாலும் அவர்களிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ளலாம். அதற்காக ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்சனை 9 மாதங்களாக நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.

 

பல்வேறு தருணங்களில் அரசு சார்பாக 7- வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் உறுதியளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் LTC, ACP, MACP, Children education allowance, medical reimbursement, new Pension  உள்ளிட்ட எதுவும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

 

அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் தொடர்ந்து போராடி வருகிறோம். அடிப்படை அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று துணை நிலை ஆளுநரையும், புதுவை ஆட்சியாளர்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

 

முன்னதாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகேயிருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றவர்களை அஞ்சலகம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து ஆசிரியர்கள் அதே இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முதலமைச்சர் நாராயணசாமி போராட்ட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இரண்டு, மூன்று நாட்களில் ஆளுநர் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலோடு மீண்டும் கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும். நிலுவையில் உள்ள 9 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. 


    

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.