Skip to main content

"புதுச்சேரி மக்கள் மே 03- ஆம் தேதி வரை அமைதி காக்க வேண்டும்"- முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion

 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (28.04.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “மாநில அளவில் டெல்லிக்கு அடுத்தப்படியாக கரோனா பரிசோதனை செய்வதில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை புதுச்சேரியில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். பொதுமக்களில் 90 சதவீதம் பேர் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். 85 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர்.
 

 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion


ஆந்திராவிற்குச் சென்று திரும்பிய 7 பேர் ஏனாம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மத்திய அரசின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய உள்துறைக்கு எழுதிய கடிதத்தால் மாநில எல்லைக்குள் விடப்பட்டு தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். காரைக்கால் பகுதியைச் சார்ந்த மாணவிகள் மத்திய பிரதேசத்தில் தங்கி உள்ளனர். வாரணாசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரமுடியாத நிலை உள்ளது. இதுபோன்று பலர் உள்ளனர். மே மாதம் 3- ஆம் தேதிக்குப் பிறகு வெளிமாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்ற உத்தரவு படி தற்போது உள்ள குற்றவாளிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பக் கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.
 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion

 

http://onelink.to/nknapp


காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வருகின்றனர். பொதுமக்கள் முடிந்தவரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பல பகுதிகளின் இடையே தமிழக பகுதிகள் வருகின்றது. இந்தச் சிக்கலை நீக்க வெளியில் இருந்து வருபவர்களை முழுமையாக நிறுத்த வேண்டும். மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் வரும் மே மாதம் 3- ஆம் தேதிவரை அமைதி காக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்”.  இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.