Skip to main content

விலகிச் சென்ற கூட்டாளி; கொலை செய்த ரவுடி கும்பல் 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

puducherry pagur incident police strared investivation

 

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த அரங்கனூர் சுடுகாட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.பி தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள்  நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ் என்கிற தமிழரசன் (வயது 39) என்பதும் பிளம்பர் வேலை செய்து வந்த அவர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

 

அதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தமிழரசன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்ட தமிழரசன் ஏற்கனவே ரவுடி கும்பலுடன் பழகி, பின்னர் அவர்களுடன் பிரச்சனை ஏற்படவே அங்கிருந்து விலகி மற்றொரு ரவுடி கும்பலில் சேர்ந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோதம் நாளுக்கு நாள் வலுத்து வந்த நிலையில், அரங்கனூர் பகுதி கிராமத்தில் நடந்த குத்தகை கூட்டத்தில் அதே  ஊரை சேர்ந்த இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலுக்கு தமிழரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தமிழரசனை அப்பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேர் காணும் பொங்கல் கொண்டாட வெளியே அழைத்துச் சென்று, அங்கு அவரை அடித்து கொலை செய்துவிட்டு அரங்கனூர் சுடுகாட்டில் வீசி சென்றது தெரியவந்தது.

 

இது தொடர்பாக பாகூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பலில்  இருந்த தமிழரசன் சமீபத்தில் அந்த கும்பலில் இருந்து விலகி எதிர் தரப்பில் இணைந்துள்ளார். இதனால்  கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பல் அவரை கடத்தி சென்று கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து  புகாரை பெற்ற போலீசார் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் (வயது 34),  அர்ஜுனன் என்கிற ஆனந்த்,  கொத்துக்கா ஏழுமலை மற்றும் கடலூர் மாவட்டம் சிங்கிரி கோவில் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, சந்தோஷ், கார்த்திகேயன், புதுக்கடையை சேர்ந்த விஜயகுமார், வேல்முருகன், கீழ் குமார மங்கலத்தை சேர்ந்த தவமணி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலை கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.