Skip to main content

புதுச்சேரி: ஒரே நாளில் இரட்டை கொலை... பொதுமக்கள் அச்சம்! 

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் 24 வயது மதிக்கத்தக்க சடலம் இருப்பதை பார்த்த குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் கோரிமேடு காவல்துறை நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். 

puducherry one day two persons incident police investigation

அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 

இந்த விசாரணையில் கொல்லப்பட்டவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. ஏற்கனவே இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிய வந்தது.
 

ஏற்கனவே கொலை வழக்கில் உள்ள இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் அவரை மதுபோதையில் தாக்கி கொன்று இருக்கலாம் என்ற கோணத்திலும்,  அவர் வீட்டினருகே கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்புவதற்காக கோரிமேடு பகுதியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதேபோன்று புதுச்சேரி ஆரியபாளையம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான இவரை அதே பகுதியை சேர்ந்த சபரி, பூவரசன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் (04/02/2020) இரவு வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.  

puducherry one day two persons incident police investigation

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று (05/02/2020) இறந்தார். தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ஒரே நாளில் இரண்டு ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் புதுச்சேரி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று நடைபெற்று வரும் கொலைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.