Skip to main content

“புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது” -முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
 '' The new education policy cannot be fully accepted '' - Narayanasamy

 

 

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று வீடியோ பதிவிலான செய்தியை அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

 

"புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவின் கணக்குப்படி,  ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 6000 ஆகவும்,  அதில் 2000 பேர் சிகிச்சையிலும் இருப்பார்கள். அவர்கள் 600 முதல் 700 பேர் தீவிரமாக கண்காணிக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள். மத்திய அரசின் உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட வீட்டை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளோம். அந்த வீட்டில் இருப்பவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் அல்லது அவர் தனிமைப் படுத்தப்பட்டால் போதும் என்று நினைத்தால் வீட்டிலேயே தனியாக இருக்க வைக்க வேண்டும். மருத்துவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற மாற்று மருத்துவ முறைகள் மூலம் சிகிச்சை பெற விரும்புவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆலோசனை செய்தோம். மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையத்தையும்,  புதுச்சேரி அரசு மருத்துவ மையத்தையும் ஒருங்கிணைத்து இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் கரோனா நோய்க்கு சித்தா முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் தொடங்கும்.

 

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பல மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் குலக்கல்வியை கொண்டுவர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழித் திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையானது வேலை வாய்ப்பினை நோக்கி செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் அதனை முழுமையாக படித்து பார்க்கும்போது மக்களுக்கு பயன்படுகின்ற திட்டத்தை கொடுக்காததாக இருக்கிறது. புதுச்சேரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். நம்முடைய பாடத்திட்டங்கள், கல்விக் கொள்கைகள் எல்லாம் வேலைவாய்ப்பை நோக்கி தான் செல்கின்றது. இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மத்திய அரசு இதற்கான நிதி எங்கிருந்து கொண்டு வரப் போகின்றது? மாநிலங்கள் மீது சுமத்த போகின்றதா? என்பது தெளிவுபட கூறப்படவில்லை.

 

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை இலவச கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு இப்போதுதான் இந்த திட்டத்தை கொண்டு வருகின்றது. ஆகவே புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசின் திட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அது மட்டுமின்றி சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு முனைகிறது.

 

இந்திய நாட்டில் பல கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள் இருக்கும்போது மாநிலத்துக்கு ஏற்றார்போல கல்விக்கொள்கை இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசு விரும்புவது போல் இருக்கக்கூடாது. இது சம்பந்தமாக நடைபெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி அரசின் நிலையை தெளிவாக கூறியுள்ளார். புதுச்சேரியில் இருமொழிக் கொள்கை இருக்க வேண்டும். தாய்மொழியாகிய தமிழும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். இந்தி விருப்பப்பட்டால் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர இந்தியை கட்டாய பாடமாக ஆக்கக்கூடாது. மத்திய அரசு இந்தியை திணிப்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

 

புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனி பாரம்பரியம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு என ஐந்து அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரி தனித்தன்மை வாய்ந்த மாநிலம். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கருத்துகளை கேட்டு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எங்களுடைய கருத்தை தெரிவிப்போம். அது சம்பந்தமான விவாதத்தை அமைச்சரவையில் வைத்து பேசி நடவடிக்கை எடுப்போம். புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான விரிவான அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இது சம்பந்தமாக மாநில அரசு முடிவு எடுக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.