Skip to main content

"மத்திய அரசு மாநிலங்களுக்கு தாராள நிதி உதவி செய்ய வேண்டும்" - நாராயணசாமி பேட்டி!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (20.05.2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

" வெளியில் இருந்து  புதுச்சேரிக்கு வருவோருக்குதான் கரோனா தொற்று உள்ளது. வெளியில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் வீட்டில் தனிமைப்படுத்துகிறோம். அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்கிறோம். ஒருவர் மருத்துவமனையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சையில் உள்ளார். அதேபோல் காரைக்காலுக்கு இருவர் திரும்பியுள்ளனர்.

 

 

puducherry narayanasamy interview

 

கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க மருந்து கண்டுபிடிப்பது அவசியம். இந்தியாவும் அந்த முயற்சியில் உள்ளது. மத்திய அரசானது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க எந்த உத்திராவாதமும் நிதி அமைச்சகம் தரவில்லை. பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் இவர்கள்தான். அத்துடன் கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களும் பாதிப்பில் உள்ளனர். அவர்களுக்க்கான முழுமையான திட்டமிடலுமில்லை.

நாட்டிலுள்ள 13 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 5 ஆயிரம் செலுத்தினால் வாழ்வு நிலை மாறும் என்ற கருத்தை மத்திய அரசு செயல்படுத்த மறுக்கிறது. மத்திய அரசின்  இத்திட்டத்தில் முழுமையாக மக்களுக்கு கிடைப்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடிதான். மற்றவை பட்ஜெட்டில் அறிவித்ததுதான். மாநிலங்கள் நிதி பற்றாக்குறையால் பாதித்துள்ளன. வருவாய் இல்லாத நிலை உள்ளது. ஊரடங்கு தளர்த்தினாலும் சகஜ வாழ்வு திரும்பவில்லை. மாநிலங்களுக்கு தாராள நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளோம். ஏற்கெனவே தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு, பாதிக்கப்பட்ட இழப்பீடு தரவேண்டும் என கடிதம் எழுதியும் பிரதமரிடமிருந்து பதில் வரவில்லை. கரோனா காலத்தில் ரூ.995 கோடி வேண்டும் என கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.


புதுச்சேரி மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு  செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது. உடனடியாக உதவ வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு இன்னும் அதிகளவில் உள்ளது. ஏராளமானோர் நடந்து செல்லும் சூழல் உள்ளது. கையில் பணமில்லை. கையில் பணத்தை தர கோரினோம். சிறப்பு ரயில்களை மத்திய அரசு நிறைய இயக்க வேண்டும். இதை மாநில அரசோடு ஒருங்கிணைந்து செய்வது அவசியம்.

மேட்டூர் அணை திறக்கும் சமயத்தில் குறுவை விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க 1 டி.எம்.சி கிடைக்க ஆயத்தப்பணிகளை செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். கடைமடை பகுதி வரை தண்ணீர் வர தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை (21.05.2020) முதல் புதுச்சேரி-காரைக்கால் பஸ் போக்குவரத்து இயங்க உள்ளது. பக்கத்து மாவட்டங்களில் கரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தொற்று அறிகுறி வரும் என்று கூறுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்"  என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.