Skip to main content

இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 01/10/2019 | Edited on 02/10/2019

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்ய நேற்று (30/10/2019) முன் தினம் கடைசி நாளாகும். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேசுவரன் உள்ளிட்ட 18 பேர்  வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

puducherry kamaraj assembly by election 11 affidavit accept election officer

இதனிடையே நேற்று (01/10/2019) வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. அதில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 18  வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி மன்சூர் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஒரு சுயேட்சை வேட்பாளர், மாற்று வேட்பாளர் என 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 3- ஆம் தேதி கடைசி நாளாகும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்