Skip to main content

மோசடியாக சேரமுயன்ற மாணவியின் தந்தையிடம் விளக்கம் கேட்டு ஜிப்மர் நோட்டீஸ்!  

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

சேர்க்கையில் மோசடியாக சேர முயன்ற தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ் படிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி போலி சான்றுகள் மூலம் புதுச்சேரி இடஒதுக்கீட்டில் இந்தாண்டு சேர்க்கை பெற்றார்.  இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர்- மாணவர் நலச்சங்கம் புகார் அளித்தது. கோரிமேடு காவல்நிலையத்திலும் சமூக அமைப்புகள் சார்பில் முறையிடப்பட்டது.   அதையடுத்து  54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் மாணவி கிருத்திகா தமிழ்நாடு, புதுச்சேரியில் முகவரி கொடுத்து மருத்துவ படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்துறை செயலர் உத்தரவின்பேரில் விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில் 2 மாத காலத்துக்குபின் இவ்விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம், ‘போலியாக முகவரி அளித்து தேர்வெழுதி ஜிப்மரில் இடஒதுக்கீடு பெற முயன்ற மாணவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்வியுடன், ஒரு வாரத்தில் விளக்கம் கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

 

puducherry jipmer


ஜிப்மர் நிர்வாகத்தின் இந்த தாமதமான நடவடிக்கையால் அந்த இடத்தில் மற்றொரு மாணவர் சேர முடியாத நிலையை சுட்டிக் காட்டியுள்ள தன்னார்வ அமைப்புகள் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாணவர், பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா கூறுகையில், “ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக 54 இடங்கள் ஒதுக்கபடுகிறது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில் முறைகேடாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதாக ஜிப்மர் நிர்வாகம், வருவாய்த்துறை செயலர், கலெக்டர், கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெளிமாநில  மாணவர்கள்  சேர்த்துக்கொள்ள மறுக்கப்பட்டனர். இதனையும் மீறி 3 பேர் போலியாக  புதுச்சேரி இருப்பிடச்சான்றிதழ் பெற்று ஜிப்மரில் விண்ணப்பித்தனர். இது குறித்து எங்களுடைய சங்கத்தின் மூலம் புகார் அளித்தோம். இதற்கிடையே  ஜிப்மர் நிர்வாகம் போலி ஆவணங்கள் கொடுத்து எம்பிபிஎஸ் சேர்ந்த புகாரில்  புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது போலி ஆவணங்கள் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளனர். இதில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவி கிருத்திகா தலைமறைவாகியுள்ளார். ஜிப்மர் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது.

 

puducherry jipmer


புதுச்சேரி ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் மூலம் வெளிமாநில மாணவி சேர்ந்துள்ளார். இந்த இடத்தில் வேறு மாணவரை தற்போது சேர்க்க முடியாது.  முறைகேடு அம்பலமானதால் அந்த இடம் காலியானது.  உடனே நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரி மாணவருக்கான கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பேராசிரியர் குமார், அதற்கு துணைபோன வருவாய் அதிகாரிகள் தவறான சான்றிதழ் என தெரிந்தும் மாணவிக்கு இடம் கொடுத்த டீன் சாமிநாதன், புகாரை ஏற்க மறுத்த காவல்துறை என அனைவரும் குற்றவாளிகள்தான். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.

மாணவி கிருத்திகா மீதான புகார் அளித்து 2 மாதத்திற்குபின் நடவடிக்கை எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. இதில் முதல்குற்றவாளி வருவாய்த்துறை. ஜிப்மர் நிர்வாகமும் தவறுக்கு துணைபோய் விட்டது. தற்போது இந்த முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் மருத்துவ படிப்பு கனவு தகர்க்கப்பட்டு உள்ளது. எனவே போலி சான்றிதழ் அளித்த அதிகாரி உள்ளிட்ட ஒவ்வொருவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.