ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி மூன்றாம் நாளாக போராட்டம்!

puducherry governor vs cm narayanasamy

புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து மூன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் நலத்திட்டங்களை புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதால் அவரை திரும்பப் பெற வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து மூன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

puducherry governor vs cm narayanasamy

புதுச்சேரி மாநிலத்தில் அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் குளிர், மழையிலும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டதையடுத்து, புதுச்சேரி 300- க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

cm narayanasamy governor kiran bedi Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe