Skip to main content

மிரட்டும் தொனியில் அறிக்கை விடுவதா?... ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்! 

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: - "சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள். விமர்சனமும், பாராட்டுதலும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கான உரிமை. மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு அந்த சாசனத்தை ஏற்றுக்கொண்டவர்களின் அறிவிப்பையும், விமர்சனத்தையும் வெளியிடுவது பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் கடமை.

puducherry governor kiranbedi puducherry press association


அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிக்கை வெளியிட்டுருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கான விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர அதை வெளியிடும் பத்திரிகைகள் மீது குற்றஞ்சுமத்தக்கூடாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீது கூட அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். அதை பிரதமரிடம் கேட்டு விட்டுத்தான் செய்தி போட வேண்டும் என பிரதமர் கூட கூறவில்லை. ஏனெனில் இது ஜனநாயக நாடு, மன்னர் ஆட்சி நடக்கவில்லை. ஆகவே தனக்கு எதிராக வரும் விமர்சனத்திற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும், இல்லையெனில் புகார் கூறியவருக்குப் பதில் அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்திரிகைகளை மிரட்டும் செயலை மேதகு துணை நிலை ஆளுநர் கைவிட வேண்டும்.அதுவே ஆரோக்கியமானது.
 

puducherry governor kiranbedi puducherry press association

 

http://onelink.to/nknapp


மேலும் ஒரு மாநிலத்தின் முதல்வரும், அமைச்சர்களும் குற்றச்சாட்டுகள் கூறும்போது அதை பத்திரிகை வாயிலாகத் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர ஊடகங்களை மிரட்டும் தொனியில் அறிக்கைவிடுவது துணை நிலை ஆளுநரின் எதேச்சதிகாரத் தன்மையைக் காட்டுகிறது. இதனைப் புதுச்சேரி செய்தியாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.