Skip to main content

முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு! 

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  

puducherry governor and cm narayanasamy helmet issue tweet


இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்த போது, 'கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிகளை மீறி செயல்படுகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது ஏனாமில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனால் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வதுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்' என்றார்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

இதனிடையே இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 19- ஆம் தேதி  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர். அப்போது முதலமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற படம் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியானது. நாராயணசாமியின் அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண்பெடி,‘மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் சட்டத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet



அதனால் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்றது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா..? என்ற பரபரப்பு புதுச்சேரியில் எழுந்துள்ளது

 

அதேசமயம் கிரண்பேடியின் இந்த பதிவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள நாராயணசாமி, ‘ஒரு கருத்தை கூறுவதற்கு முன் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  டி.ஜி.பி ஸ்ரீ பாலாஜி வஸ்தவாவிடம் புகார் அளித்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து  நிலையம் உள்ளிட்ட  நகர பகுதிகளில், இரவு நேரத்தில் ஆய்வு செய்த கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து செல்லும் படத்தை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை கிரண்பேடி மீறியுள்ளதாகவும் ,சட்டத்தின் ஆட்சி நிலை பெற இந்த போக்குவரத்து விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

 

மீண்டும் தலைக்கவசம் (ஹெல்மெட்) விவகாரத்தில் புதுச்சேரியில் கிளம்பியுள்ள புகைச்சல் யாரை எரிக்க போகிறதோ எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.