Skip to main content

புதுச்சேரியில் இன்று முதல் பால் விலை உயர்வு!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, ‘ புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படாத நிலையிலும் தற்போது பால் விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்தார்.
 

அதன்படி பால் கொள்முதல் விலை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக (அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய்) உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். அதனை அடுத்து அனைத்து வகை பாலுக்கும் விற்பனை விலை  6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.  உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார். புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பால் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி  சமன்படுத்திய பால் toned milk 36 லிருந்து 42 ரூபாயாகவும்,சிறப்பு சமன்படுத்திய பால் special toned milk 38 லிருந்து 44 ரூபாயாகவும், நிலைப்படுத்திய பால் standardized milk 42 லிருந்து 48 ஆகும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

puducherry government announced milk price raised


இதனிடையே குப்பை வரி குறைப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்ததன் படி பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை எனக்கூறி பாஜக நியமன சட்டமன்ற  உறுப்பினர்கள் குப்பைக்கூடைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் முதல்வர் நாராயணசாமி, 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அதில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில்வரி, குப்பை வரி ஆகியவற்றை குறைப்பதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன உறுப்பினர்கள் பேரவைக்குள் குப்பை தொட்டிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.