Skip to main content

புதுச்சேரி: சம்பள நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

puducherry employees salary issues

 

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான பாசிக் நிறுவனத்தில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 

 

இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பங்கள் சொல்லொனா துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. 

 

கரோனா பேரிடர் காலத்திலும் இவர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்திலிருந்து ஒரு மாதச் சம்பளம் கூட வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது புதுவை அரசு. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தில் 50% உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதம் உள்ள 50% சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவேண்டும், பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. 

 

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பாசிக் நிறுவனத்தில் லாபம் ஈட்டக்கூடிய மினரல் வாட்டர் பிரிவு, குப்பையில் உரம் தயாரிக்கும் பிரிவு, போர்வெல் பிரிவு (ரிக்) ஆகிய பிரிவுகளை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் நிறுவனத்தில் பல ஏக்கர்களில் பண்ணை அமைக்கப்பட்டது. 

 

இந்தப் பண்ணையில் மாமரம், கொய்யா, தென்னைமரம், பலா, சப்போட்டா ஆகிய மரங்கள் இருந்து வருகின்றன. இதில் விளையக்கூடிய பொருட்கள் காய்த்து அறுவடை செய்யாமல் வீணாகியும், களவாடப்பட்டும் வருகிறது. இந்தப் பண்ணையில் விளையக்கூடிய பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சம் பாசிக் நிறுவனத்திற்கு வருமானம் வரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பயனற்ற நிலையில் இருந்துவரும் பல்வேறு வகையான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சங்கள் நிறுவனத்திற்கு வந்து சேரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் தாமதமாகவும், காலம் கடத்தியும் நடைபெறுகிறது. 

 

குறிப்பாக இந்நிறுவனத்தில் மேலாண் இயக்குனராக உள்ள சிவப்பிரகாசம் வேளாண் துறையிலும் பொறுப்பு வகித்து வருகிறார். கூடுதலாக பாசிக் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்து வருவதால், இவரால் முழுமையாக பாசிக் நிறுவன வளர்ச்சிக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே, பாசிக் நிறுவனத்திற்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

http://onelink.to/nknapp

 

அதேபோல் இந்நிறுவனத்தில் மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (கணக்கு), மேலாளர் (தணிக்கை பிரிவு) ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. அவைகளை அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

 

ஏ.ஐ.டி.யுசி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி, கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.