Skip to main content

"அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்"- தி.மு.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தல்! 

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

puducherry dmk party mla siva statement

 

புதுச்சேரியில் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,  தி.மு.க.வின் தெற்கு மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா ஊரடங்கால் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுக்கடைகள், உணவகங்களில் வேலை செய்வோர், முடிதிருத்துவோர், தையல் கலைஞர்கள், காலனி செய்வோர், சலவை தொழிலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள்,  குயவர்கள், சமையல்காரர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், மெக்கானிக் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 

இவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யக் கூடியது நலவாரியம்தான். எனவே அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டாவது அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு தங்களுக்கான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். 

 

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு தேவையான அதிகாரிகளை நியமித்து, நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மாறாக மீண்டும் புதுச்சேரி முறைசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக மட்டும் ரூபாய் 1.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டும் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பாட்டிற்கு வராதோ என்ற அச்சம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கெரோனா நிவாரணம், தீபாவளி ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. 

 

இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு அதிகாரிகளை நியமித்து, நிதியை ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த நல வாரியம் மூலம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளி ஊக்கத்தொகையை இந்த ஆண்டு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.