Skip to main content

'தமிழகத்திலிருந்து வருபவர்களால் தான் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிப்பு'- முதல்வர் நாராயணசாமி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

puducherry cm narayanasamy press meet


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (12/06/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று, பரவலாக அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக கிராமப்புறங்களில் அதிகளவு பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து வருபவர்களால் புதுச்சேரியில் அதிகளவு தொற்று பாதிப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வயோதிகர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
 


வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களிடமிருந்து விலகி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புதுச்சேரியில் சமூகப் பரவல் இல்லை. தொற்றுள்ளவர்களிடமிருந்து தான் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களாலும் தான் அதிகளவு தொற்று பரவுகின்றது. அதற்காகத் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுக்காமல் அனைத்து விதநோய்களுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.  

புதுச்சேரி மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலமாக வெளியில் உள்ள ரவுடிகளை தொடர்பு கொண்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதும், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதைக் கண்காணிக்க சிறைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகளை ஒடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 
 

 


கடந்த வருடமே மத்திய அரசு முதலமைச்சர் செலவிடும் நிதியை 10 கோடியில் இருந்து 50 கோடி வரை செலவிட அனுமதி அளித்தும் ,துணை நிலை ஆளுநர் அதனை மீண்டும் மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். இது போன்று மத்திய அரசின் உத்தரவை மதிக்கவில்லை. துணை நிலை ஆளுநரின் மக்கள் விரோத போக்கால் மக்களுக்கு அரசால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று குற்றம் சாட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.