Skip to main content

"புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது"-  முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

puducherry cm narayanasamy coronavirus peoples

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (20.08.2020) வெளியிட்டுள்ள வீடியோ செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

புதுச்சேரியில் தற்போது 1796 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் 300- க்கும் மேற்பட்ட படுக்கைகள் வழங்கிய நிலையில், அரியூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் படுக்கைகள் வழங்க மறுத்ததால் பேரிடர் மீட்புத் துறை சார்பாக மருத்துவமனை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 

செவ்வாய்கிழமை ஊரடங்கு பிறப்பித்தும் கரோனா நோய்த் தொற்று குறையவில்லை. நோயைத் தடுக்க சுகாதாரத் துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை என பலரும் கடுமையான பாடுபடுகிறார். இந்த வேளையில் துணைநிலை ஆளுநர் மத்திய குழுவை அனுப்ப கோரியுள்ளார். கரோனா நோய், புதுச்சேரியில் மட்டுமல்லாது பல மாநிலங்களையும் பாதித்துள்ளது. தனது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு உத்தரவு போட்டால் மட்டும் போதாது.

 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுவெளியில் விநாயகர் சிலைகள் அமைத்தால் மக்கள் அதிகம் கூட நேரிடும். இதனால் நோய்த் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஆகவே தயவு செய்து விநாயகர் சிலையை வீட்டில் அமைத்து வழிபடுங்கள், கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள், எனக்கும் இறை நம்பிக்கை உள்ளது. நானும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றேன். ஆகவே நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளைப் பொது இடத்தில் வைக்கவோ, ஊர்வலமாகக் கொண்டு செல்லவோ கூடாது. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

 

விஷமிகளின் சதியை முறியடிக்கும் வகையில் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும். தனது எண்ணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜீவ்காந்தி பிறந்தநாளில் கோரிக்கையாக வைக்கிறேன்". இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.