Skip to main content

"அரிசி போடுவதை தடுத்துவிட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது?"-புதுவை முதல்வர் நாராயணசாமி கேள்வி!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020
puducherry chiefminister narayanasamy pressmeet

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (13.10.2020) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல்  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

புதுச்சேரியில் இதுவரை 17 சதவீதம் பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்து இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறைகளும் கரோனா நோயை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு 798 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு வெளிமார்க்கெட்டில் இருந்து நிதியை வாங்கி இழப்பை ஈடு கொடுக்க வேண்டும் என 9 மாநிலங்களில் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு  எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.  மாநிலத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு கொடுக்கப்படவில்லை. மாநில அரசை கடன் வாங்க சொல்கிறார்கள். மத்திய அரசு அனுமதி இல்லாமல் புதுச்சேரி அரசு கடன் வாங்க இயலாது. மத்திய அரசு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது வெளி மார்க்கெட்டில் கடனை வாங்கி இழப்பீட்டை மாநிலத்திற்கு வழங்கலாம் என தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை.

சென்டாக் மூலம் மருத்துவ மானவர்கள் சேர்க்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. மேலும்  நமது மாநில அரசின் பரிந்துரைப்படி மாணவர்களை சேர்த்தனர். ஒரு சில கல்லூரி நிர்வாகம் அல்லது மாநில அரசு பரிந்துரைகளை ஏற்காமல் தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்தது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகிகளை மிரட்டி பொய்யான வழக்கு தொடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தியது. சென்டாக் மீது தவறு நடப்பதாக கூறி அதிகாரிகளின் மீது சி.பி.ஐ விசாரணைக்கு வைக்க உத்தரவிட்டது. சி.பி.ஐ புதுச்சேரிக்கு வந்து மருத்துவக்கல்லூரி ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் அதிகாரிகள் சரிவர செய்துள்ளதாக கூறி உள்ளனர்.

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்குகிறேன் என்று துணைநிலை ஆளுநர் தற்போது தெரிவித்திருப்பது என்ன நோக்கம்? தவறான தகவல்களை நான் கொடுப்பதாக கூறியுள்ளார். புதுச்சேரி மக்கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பத்தை துணைநிலை ஆளுநர் உருவாக்குகின்றார். அரிசி போடுவதை தடுத்துவிட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது?

அரிசி கொடுப்பதால் ஊழல் நடை பெறுகிறது என்கிறார். இது அனைத்து மாநிலங்களின் நடைபெறுகிறதா? அரிசி குறித்தான வழக்கு நிலுவையில் உள்ள போது நான் தவறான தகவல் வெளிப்படுத்துவதாக துணை நிலை ஆளுநர் கூறுவது எவ்வாறு? அரசின் கொள்கையில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது ஏன்?  ராஜ்நிவாஸ் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. துணைநிலை ஆளுநர் அரைகுறையான செய்தியை சொல்வதை நிறுத்தி விட வேண்டும்.புதுச்சேரி மக்களுக்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்"என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.