Skip to main content

"தமிழக முடிவை பொறுத்தே புதுச்சேரியில் ஊரடங்கு முடிவு"- முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (11/04/2020) காலை 11.00 மணியளவில் கரோனா பாதிப்பு குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சியின் மூலமாக கலந்துரையாடினார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் காணொளி கலந்தாய்வில் கலந்து கொண்டு புதுச்சேரி நிலவரம் குறித்து கூறினார். 

 

 

puducherry chief minister narayanasamy press meet


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மாநில முதலமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது என்றும், விவசாயம், கட்டுமான  தொழில், தொழிற்சாலைகள் பதிக்கப்பட்டுள்ளன எனவும், அதனால்  மாநிலங்களுக்கு வருவாய் இல்லாததால் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். நான்கு மாதத்திற்கு ஜிஎஸ்டி பணத்தை மாநிலத்திற்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். மேலும் மக்களுக்கு வழங்க 900 கோடி கேட்டுள்ளோம். பிரதமர் இதுவரை பதிலளிக்கவில்லை.

 

;


மேலும் கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு  மக்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். மத்திய அரசில் இருந்து சில விதிமுறைகள் அளிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார். 

puducherry chief minister narayanasamy press meet


ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பின்பு புதுச்சேரியில் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்திற்கு அருகில் தமிழகம் இருப்பதால் நாம் தனியாக முடிவு எடுக்க முடியாது. தமிழக முடிவை பொறுத்தே புதுச்சேரியில் ஊரடங்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் எந்த மத விழாக்களும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. (12/04/2020) அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட உள்ளதால் தேவாலயங்களில் பாதிரியார் உட்பட 3 பேர் திருப்பலி நிறைவேற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.