Skip to main content

மத்திய அரசு, ஊரடங்கு முடிவை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும் -  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!  

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
 Puducherry Chief Minister Narayanasamy


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், “புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றார்கள். அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து ரத்தம் சுத்திகரிப்பு, நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு வருகின்றார்கள். அவர்கள் உரிய மருத்துவ சான்றிதழுடன் வந்தால் அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம்.

 

 


இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல கோரிக்கை வைத்துள்ளார்கள். வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உள்ளோம்.

 


இன்று காணொளி மூலம் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம்  நடைபெற்றது.  கரோனா நோய் தொற்றை தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும், மத்திய அரசு உதவிகள் குறித்தும் பேசப்பட்டது. தொழிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மே 17-க்கு பிறகு ஊரடங்கு அதிகரித்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த சூழ்நிலையில் உதவ முன்வரவேண்டும். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலம் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு இதற்கு முடிவெடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் 30 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொற்று இருந்தால் அந்த தெருவை மட்டும் தனிமை படுத்த வேண்டும். மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் போதும் மாநிலங்களை கலந்துகொண்டு அறிவிக்க வேண்டும். இதனை மாநிலத்தின் கையில் விட்டுவிட வேண்டும். ஊரடங்கு குறித்தான முடிவையும் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என்றார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.