Skip to main content

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்! 

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்விக்கான கட்டணத் தொகையை 225 மடங்கு உயர்த்தியதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 19 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 


மாணவர்களை கடும் அவதிக்குட்படுத்தி வேடிக்கை பார்க்கும் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தையும், கட்டண உயர்வை கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கும் ஆளுநரையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை (25/02/2020) புதுச்சேரி வருகை தரும் துணை ஜனாதிபதி அவர்களுக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தி அவரது கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

PUDUCHERRY CENTRAL UNIVERSITY FEE RAISED STUDENTS

இந்நிலையில் மத்திய பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களும் மாநிலம் தழுவிய மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 

சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜா திரையரங்கம் அருகில் மாணவர் கூட்டமைப்பு துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்திலும், இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் ஜெயபிரகாஷ் தலைமையிலும்,  தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முருகன் ஷேக் தலைமையிலும், தாகூர் கலைக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு துணைச் செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் முரளி தலைமையிலும், சமுதாயக் கல்லூரியில் இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன் தலைமையிலும், மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முத்துக்குமார் மணி தலைமையிலும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களும் நடைபெற்றன. 

PUDUCHERRY CENTRAL UNIVERSITY FEE RAISED STUDENTS

இந்த போராட்டங்களை அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் கூட்டு இயக்கத்தின் இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, திமுக மாணவர் அணி, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஒருங்கிணைத்தனர்.
 

ஒரே நாளில் அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.