Skip to main content

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் சட்டமன்ற உறுப்பினர்! 

Published on 27/06/2021 | Edited on 27/06/2021

 

 

puducherry cabinet ministers swearing

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது.

puducherry cabinet ministers swearing

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (27/06/2021) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா ப்ரியங்கா, பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகிய ஐந்து பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

puducherry cabinet ministers swearing

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு எனக்கூறி துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஒன்றிய அரசு என்பது விவாதப் பொருளாகிய நிலையில் இந்திய ஒன்றியம் எனக் கூறி பதவியேற்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

puducherry cabinet ministers swearing

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

puducherry cabinet ministers swearing

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "புதுச்சேரியில் பதவியேற்றுள்ள புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் இணைந்து, உறுதியுடன் செயல்பட்டு, புதுச்சேரி மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.