Skip to main content

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கரோனா தொற்று!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

 Puducherry Agriculture Minister Kamalakkannan gets corona infection!


புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (10.08.2020) வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட புதிதாக 254 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.  

கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜெ.ஜெயபாலுக்கு 25-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் சட்டமன்ற மைய அரங்கில் நடைபெறாமல் திறந்தவெளியில் மரத்தடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.  

 

 Puducherry Agriculture Minister Kamalakkannan gets corona infection!


இதனிடையே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அமைச்சர் கந்தசாமி, அவரது இளைய மகன் விக்னேஷ் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணனுக்கு சளி தொல்லை ஏற்பட்டது. இதனால் பரிசோதனை செய்யப்பட்டதில் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 3,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,277 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

http://onelink.to/nknapp


கடந்த மாதத்தில் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் 100, 150 என இருந்த நிலையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 200, 250 என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவது கவலை அளிப்பதாக புதுச்சேரி மாநில மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.