Skip to main content

கோவில் தனியறையில் இருந்த ஜோடியை செருப்பால் அடித்த பொதுமக்கள்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021
The public who kicked the couple in the temple private room

 

கோவிலில் உள்ள தனியறையில் ஜோடியாக தனிமையில் இருந்த இருவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் செருப்பால் அடித்து தாக்கினர். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் த்கங்கோரில் உள்ள சர்னேஷ்வர் மகாதேவ் கோயில் பூசாரி ஒருவர் கோயில் வளாகத்தில் உள்ள தனியறையில் பெண் ஒருவருடன் இருந்ததை பார்த்த பக்தர்கள், இருவரையும் வெளியே இழுத்து போட்டு செருப்பால் அடித்து தாக்கினர். மேலும் பூசாரி உடன் இருந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தும் அவரை கிழே தள்ளியும் தாக்கினர்.

 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளான பெண் காவல்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். எஸ்.பி, ராஜேந்திர பிரசாத்திடம் கொடுத்த புகாரில், ‘என்னுடைய நற்பெயரை களங்கப்படுத்தவே என்னை தாக்கியது மட்டுமின்றி, ஆடையை கிழித்தும் அவமானமப்படுத்தி உள்ளனர். பூசாரி குடும்பத்தினருடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. சம்பவ நாளில் பூசாரியின் மனைவி வருவதற்காக தான் காத்திருந்தோம். ஆனால் சிலர் எங்களை தவறாக  புரிந்து கொண்டு எங்களை தாக்கினர். அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். எனது கணவர் சமூகத்தில் உயர்ந்த வேலையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டனர்’ என்று தெரிவித்தனர். மேற்கண்ட புகாரை பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் சென்று காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.