ADVERTISEMENT

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட்

10:11 AM Nov 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இ.ஓ.எஸ்.-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இன்று (07/11/2020) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. -சி 49 ராக்கெட் (PSLV-C 49).

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (07/11/2020) மதியம் 03:02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி 49 பாய்கிறது. 26 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்ததும் இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி-சி 49ஐ ஏவுகிறது இஸ்ரோ.

அனைத்து சூழ்நிலைகளிலும் படங்களை எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ். 01-ல் உள்ளது. இ.ஓ.எஸ்.-01 வுடன் வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்கிறது பி.எஸ்.எல்.வி- சி 49. அமெரிக்கா, லக்ஷம்பர்க்கை சேர்ந்த தலா 4, லூதியானாவின் ஒரு செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.

பி.எஸ்.எல்.வி. வரிசையில் 51- வது ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா காரணமாக, ராக்கெட் ஏவுவதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT