டெல்லியில் ஆயிர கணக்கில் மரம் வெட்டவிருப்பதை எதிர்த்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தெற்கு டெல்லியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தசரோஜினி நகர், நௌரோஜி நகர்,நேதாஜி நகர், கஸ்தூரிபா நகர் போன்ற இடங்களில் 16500மரங்கள்வெட்டப்படும் என செய்திகள் வெளிவந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏற்கனவே வாகனங்களின் பெருக்கத்தால் வெளியாகும் நச்சு புகையால் காற்றுமண்டலமே மாசுபட்டு வருகிறது. இருக்கும் மரங்களையும் வெட்டிவிட்டால் இன்னும் மோசமான நிலையை டெல்லி சந்திக்கும்எனவே வீட்டுவசதி வாரியம் மரம் வெட்டும் நடவடிக்கையை கைவிடவேண்டுமென அரசுசாராசுற்றுசூழல் ஆர்வலர்கள் ஒன்றாக சேர்ந்துசரோஜினி நகரில் மரங்களை வெட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி மரம் வெட்டுவதற்கு எதிரான வசனங்கள் அடங்கிய பதாகைகளுடன் மரத்தின் கீழ் நின்றும், மரத்தின் மீது ஏறி மரத்தையும் தங்களையும் ரிப்பனால் ஒன்றாக கட்டிக்கொண்டும், கூட்டாக்காக மரத்தை ஆரத்தழுவியும்இனி மரங்கள் வெட்டுவதை அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் போராட்டம் நடத்தினர்.