Skip to main content

“ஏழைகள் சிகிச்சை பெறுவதில் உள்ள தடைகளை களைய இத்திட்டம் முக்கிய பங்காற்றும்” - பிரதமர் மோடி பெருமிதம்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

"This project will play a major role in removing barriers to the treatment of the poor" - Prime Minister Modi proud

 

இந்தியர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை வழங்கும் வகையில் (ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைத்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மக்கள் தங்களின் மருத்துவ தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி, நேற்று (27.09.2021) ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார். முதலில் 6 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

தற்போது இந்த திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்படும். ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். பரிசோதனைகள், நோய் குறித்த விவரம், சந்தித்த மருத்துவர்கள், எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் நோயறிதல் குறித்த தகவல்கள் ஆகியவை ஐடியில் சேகரிக்கப்படும். ஒருவேளை நோயாளி, ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்றாலும் இந்த அட்டை மூலம் அவர் புதிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது எளிதாகும். இதேபோல், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது என்பது மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் எளிதாகும். ஆதார் மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படும் சுகாதார அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்கும்.

 

சுகாதார அடையாள எண், டிஜி மருத்துவர், தொலைதூர மருத்துவம், மின்-மருந்தகம், சுகாதார சேவைப் பதிவகம், டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மருத்துவக் கோப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருக்கும். இதனை துவங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, “ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் உள்ள தடைகளைக் களைய இந்த திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று கூறினார். மேலும், 130 கோடி ஆதார் ஐடிகள், 118 கோடி மொபைல் சந்தாதாரர்கள், சுமார் 80 கோடி இணைய பயனர்கள் மற்றும் 43 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் - இவ்வளவு பெரிய, இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பை உலகில் வேறு எங்கும் காண முடியாது” என்று இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் வருந்துவார்கள்” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 PM Modi says Opposition parties will regret the Supreme Court verdict at electoral bond

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவானது, தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் உள்ள மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 

அந்த வகையில், இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நீங்கள் பணத்தின் வழியைப் பெறுகிறீர்கள். எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? அதனால்தான் நான் சொல்கிறேன், இனியாவது எதிர்க்கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வெண்டும். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அனைத்தும் வருந்தும்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற சட்டங்கள் ஏன் அரசால் கொண்டு வரப்படவில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் சீர்திருத்தங்கள் என அரசால் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் கமிஷனர்களாக்கப்பட்டனர். அந்த அளவில் எங்களால் விளையாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எங்களின் அர்ப்பணிப்பு. நாட்டில் பலர் களமிறங்கியுள்ளனர். மிகவும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகள் வந்துள்ளன. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு நிறைய நன்மை கிடைக்கும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில், ஒரு வார்த்தையில் எந்த அர்ப்பணிப்பும் பொறுப்பும் இல்லை. ராகுல் காந்தியின் ஒவ்வொரு எண்ணமும், முரண்படும் பழைய வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும்போது, ​​இந்தத் தலைவர் பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில், ஒரு அரசியல்வாதி ‘வறுமையை ஒரே அடியில் அகற்றுவேன்’ என்று சொல்வதைக் கேட்டேன். 5-6 தசாப்தங்களாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படிச் சொல்லும்போது, ​​இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று நாடு நினைக்கிறது?” என்று கூறினார். 

Next Story

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் - தக் லைப் செய்த பிரகாஷ் ராஜ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

prakash raj about modi latest

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

 

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி குறித்து பிரகாஷ் ராஜ் பேசியிருக்கும் வீடியோ பலராலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலில் பிரகாஷ் ராஜிடம், “நீங்களும், நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

 

இதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் சிறந்த நடிகர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், மிகச்சிறந்த பேச்சாளர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார்” என்றுள்ளார்.