Priyanka gandhi won wayanad bypoll election

கேரளா மாநிலம் வயநாடுஇடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின்எண்ணிக்கை இன்று (23-11-24) நடைபெற்று வருகிறது. இதில், வயநாடு தொகுதியில் போட்டியிட்டகாங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காலை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அதன்படி, பிரியங்கா காந்தி சுமார் 6,22,338வாக்குகளைப் பெற்று தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்தியனை விட 4,10,931 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். சத்யன் 2,11,407 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தில் உள்ளார். பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்தில் உள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றி முகத்தில் இருந்த பிரியங்கா காந்தி, முன்னதாக வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வயநாட்டின் என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன். காலப்போக்கில், இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்வீர்கள் என்பதையும், நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காகப் போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி, மேலும் நீங்கள் எனக்கு அளித்த அபரிமிதமான அன்புக்கு நன்றி. கேரளா ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த எனது அலுவலக சகாக்கள், உங்கள் ஆதரவிற்கு நன்றி. உணவு இல்லாமலும், ஓய்வு இல்லாமலும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் கார் பயணங்களை சகித்துக்கொண்டதற்காகவும், நம்பும் இலட்சியங்களுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்காகவும் மிகப்பெரிய நன்றி.

Advertisment

என் அம்மா, ராபர்ட் மற்றும் எனது ரைஹான் மற்றும் மிராயா ஆகியோருக்கு, நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் எந்த நன்றியும் போதாது. என் சகோதரன் ராகுலுக்கு, நீங்கள் அனைவரையும் விட துணிச்சலானவர். எனக்கு வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி” என்று பதிவிட்டார்.