ADVERTISEMENT

இளைஞர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்...

10:17 AM Apr 03, 2019 | kirubahar@nakk…

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன் ஓர் பகுதியாக 2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி டெல்லியில் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் அதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இளைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "தயவுசெய்து தேர்தல் அறிக்கையை வாசிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறையாக வாக்களிப்பவர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றியதாக இந்த தேர்தலை மாற்றுங்கள்" என அவர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT