ADVERTISEMENT

"வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது" - பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்...

11:16 AM Feb 27, 2020 | kirubahar@nakk…

டெல்லி வன்முறை தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி கலவரத்திற்கு முன்பு, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி முரளிதர், இரவோடு இரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "நீதிபதி முரளிதரின் நள்ளிரவு இடமாற்றம் தற்போதைய சூழலில் அதிர்ச்சியளிக்கவில்லை, ஆனால் இது உண்மையிலேயே வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.

கோடிக்கணக்கான இந்தியர்கள் நமது நேர்மையான நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் நீதித்துறையை குழப்புவதற்கும், மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்கும் முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயல்கள் இழிவானவை" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT