Advertisment

"ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்" - பிரியங்கா காந்தி கருத்து...

ddd

அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

Advertisment

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.

Advertisment

ராமர் மற்றும் சீதையின் அருள் உரை மற்றும் அருளால், ராம்லல்லா கோயிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Ayodhya priyanka gandhi Ram mandir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe