மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Advertisment

priyanka gandhi about rahuls resignation

இதனையடுத்து நேற்று அதிகாரபூர்வமாக பதவி விலகிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கும் விதமாக கடிதம் ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் ராகுலின் இந்த முடிவு குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ராகுல்காந்தி எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது என்றும், இத்தகைய துணிச்சல் ஒரு சிலருக்கே உண்டு. அவரின் முடிவை மதிக்கிறேன்" என கூறியுள்ளார்.