Skip to main content

விபத்தைத் தடுக்க ப்ரியா வாரியர் - குஜராத் போலீசின் குறும்பு!

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்திலிருந்து வெளியான 'மாணிக்க மலராய' பாடலில் ஒரு காட்சியில் ப்ரியா வாரியர் என்ற இளம் நடிகை, தன் புருவத்தையும் கண்களையும் அசைத்து மௌன மொழியில் பேசுவார். ப்ரியா வாரியர் கண் அசைத்தது ஒரு பையனுக்குத்தான். ஆனால் அந்தக் கண் அசைவு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனதையும் கட்டிபோட்டுவிட்டது. சமூகவலைத்தளத்தில் ஒரு இரவில் பிரபலமானவர்கள் பட்டியலில்  ப்ரியா வாரியர் இணைந்தார்.

 

Priya varrier - traffic police



நாட்களாகிவிட்டது, ஒரு வழியாக ப்ரியா வாரியரின் தாக்கம் முடிந்தது என்று நினைத்தால் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகர் போலீசாரையும் அந்த கண்ணசைவு கவர்ந்துள்ளது. அவர்கள் சாலை விபத்துகளை தவிர்க்க ப்ரியா வாரியர் கண்ணடிப்பது போன்ற படத்தைப் போட்டு, அதில் "விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும். எந்தவொரு கவனச் சிதறலும் இல்லாமல் கவனமாக வண்டி ஒட்டவும்" என்ற விளம்பரத்தை சிக்னல்களில் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

 

Kolaveri ad



இதே போன்று தனுஷின் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் வெளியான பொழுதும் இதே போன்ற விழிப்புணர்வு பலகையை வைத்திருந்தனர். சென்னை போக்குவரத்து காவல்துறை வைத்த அந்த பலகையில் 'ஒய் திஸ் கொலவெறி? கோபப்படாமல் வாகனத்தை ஓட்டுங்கள்' என்ற வாசகம் இருந்தது. இந்தப் பலகையை டெல்லி மற்றும் பெங்களூரு போலீசாரும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படித்தான் நான் விழுந்தேன்!” - விபத்து காட்சியை வெளியிட்ட வைரல் நடிகை...!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021
popular actress fell down while in shooting

 

 

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் படத்தில் இடம்பெறும் கண் சிமிட்டும் காட்சி மூலம் பல ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பிரியா பிராகாஷ் வாரியர். அந்த கண் சிமிட்டும் வீடியோ வெளியான பிறகு பலரும் அதைப் போன்றே முயற்சி செய்து டிக்டாக் பொன்ற வீடியோ வெளியிடும் செயலில் ஈடுபட்டனர். 
 


பின்னர் அவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘செக்’ படத்தில், அவர் நடிகர் நிதின் முதுகின் மீது ஏற வேண்டிய காட்சியில், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அவருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள் அவரை  தூக்கினர். இந்நிலையில் இந்த விபத்து வீடியோவை நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நிதின், ரகுல்பிரீத் சிங், பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'செக்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Next Story

"நான் மட்டும் ஏன் இதைச் செய்தேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்'' - ப்ரியா வாரியர் விளக்கம்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

vsv


'ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் கண் சிமிட்டல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறினார். இவரை இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகைகளுக்கு இணையாக 70 லட்சதிற்கு மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமிற்குள் வந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து தான் வெளியேறியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில்...
 


''ஊரடங்கு காலத்தில் அனைவரும் இணையத்திலேயே இருக்கும்போது நான் மட்டும் ஏன் சமூக வலைத்தளத்திலிருந்து விலகினேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்குப் பின்னால் பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்தவரை மற்ற விஷயங்களை விட என் மன அமைதி மட்டுமே எனக்கு முக்கியம். நான் எந்த காரணத்துக்காக செய்தேன் என்பது முக்கியமில்லை. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நான் மன அமைதியுடன் இருந்தேன். ஆனால் இது எனக்கு தொழில்ரீதியான தளம் என்பதால் என்னால் நீண்டநாள் இதிலிருந்து விலகியிருக்கமுடியாது. இரண்டு வாரங்களே விலகியிருந்தாலும் உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்தக் காலத்திலும் சமூக வலைத்தளங்கள் என் மனதைக் காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பேன்.

ஆனால் சமீபகாலமாக அது என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எனவே ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் இதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறிவந்ததைப் பார்க்கமுடிந்தது. இதை ஏன் ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் கேலி செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. தினமும் என்னைப் பற்றிய ஏதாவது ஒரு கேலியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இன்ஸ்டாவிலிருந்து விலகியதற்கு அது காரணமல்ல. மீண்டும் இன்ஸ்டாவிலிருந்து விலகமாட்டேன் என்று சொல்லமுடியாது. தேவைப்பட்டால் மீண்டும் நிச்சயமாக விலகுவேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.