Skip to main content

மோசடி ஆசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ராணுவப்படையினர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

 prime minister office fake officer incident in srinagar 

 

பிரதமர் அலுவலகத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிவதாகக் கூறி காஷ்மீரில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்புடன் சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குஜராத்தை சேர்ந்தவர் கிரண் படேல். இவர் சமீபத்தில் காஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் தான் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் பிரச்சாரம் மற்றும் வியூக துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளதாகவும், டெல்லியில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத சகல வசதிகளுடன் கூடிய காரும் இவருக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்து வந்துள்ளார்.

 

இருப்பினும் கிரேன் படேல் மீது அங்கு இருந்த போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் முறையாக விசாரணை செய்தபோது தங்களை மோசடியாக ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

வெள்ள நிவாரணப் பணிகள்; பிரதமர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Flood Relief Works; Study meeting at Prime Minister's Office

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்  தமிழகத்தில் வெள்ள பாதிப்பு  நிவாரணப் பணிகள் தொடர்பாக டெல்லியில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற  இந்த உயர்நிலைக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.