Advertisment

சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

Prime Minister Narendra Modi inaugurates Pakyong Airport

சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையத்தை 24.09.2018 திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பாக்யோங்கில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம்தான் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்.

இந்த நிகழ்ச்சியில் சிக்கிம் மாநில முதல் மந்திரி பவான் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் பாக்யோங் பகுதியில் 201 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தை அமைப்பதற்கு ரூ.553 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் அக்டோபர் மாதம் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

airport Pakyong inaugurate Narendra Modi prime minister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe