Skip to main content

மன்மோகன் சிங் அமைச்சரவை போல் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை...!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

 

prime minister narendra modi cabinet ministers


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது. இதில் ஹர்தீப்சிங் புரி, கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 28 பேர் மத்திய இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த அமைச்சரவைகளின் எண்ணிக்கை போன்றே பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையும் உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்!

pm

1996- ஆம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் 13 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்த போது, அவரையும் சேர்த்து அமைச்சரவையில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். பின்னர், 1998- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது, அவரையும் சேர்த்து 21 அமைச்சர்கள், 4 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 16 இணையமைச்சர்கள் என மொத்தம் 41 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். 

 

அதைத் தொடர்ந்து, 2004- ஆம் ஆண்டு முதல்முறையாக மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பிரதமர் அல்லாமல் 29 அமைச்சர்கள், 8 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 40 இணையமைச்சர் என மொத்தம் 77 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.

 

2009- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, பிரதமர் நீங்கலாக 32 அமைச்சர்கள், 12 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 32 இணையமைச்சர்கள் என மொத்தம் 76 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.

 

அதன்படி, தற்போதைய (2021 ஆம் ஆண்டு) மத்திய அமைச்சரவையிலும் பிரதமர் அல்லாமல், 30 அமைச்சர்கள், 2 தனி அதிகாரம் கொண்ட அமைச்சர்கள், 45 இணையமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். 

 

கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 53 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''உண்மையைப் பேசியதற்குப் பலியாகி இருக்கலாம்'' - அமைச்சரவை மாற்றம் குறித்து ராஜன் செல்லப்பா கருத்து

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

nn

 

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டிருந்தன. தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த இந்த மாற்றம் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா பேசுகையில், ''அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. சில சில சிதறல்கள் இருக்கும். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதும் இல்லை. ஒரு சிலரைத் தவிர மற்ற அத்தனை பேரும் அதிமுகவின் இரட்டை இலை இருக்கக்கூடிய; தலைமைக் கழகம் இருக்கக்கூடிய இடத்திற்கு நோக்கி வருவார்கள். அமைச்சரவையை மாற்றிய காரணத்தினால் ஊழல் செய்வது, தவறு செய்வது மாறிவிடாது. அமைச்சரவையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம் ஏமாற்றக்கூடிய மாற்றம் தான். ஒருவர் உண்மையைச் சொன்னார் என்பதற்காக மாற்றப்பட்டாரா? ஒருவர் திறமையற்றவர் என்பதற்காக மாற்றப்பட்டாரா? என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

 

ஜெயலலிதா ஒரு அமைச்சரை மாற்றுகிறார் என்று சொன்னால் அவருடைய பொறுப்பு மட்டுமல்ல, ஏதோ ஒரு சின்ன தவறு செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் தெரியும். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு, திறமை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்காக மாற்றலாம்; ஊழல் செய்வதற்காக மாற்றலாம்; அதிகம் பேர் உண்மையைப் பேசியதற்குப் பலியாகி இருக்கலாம். இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த மாற்றம் மக்கள் வளர்ச்சிக்காக இல்லை, அந்தக் கட்சியினுடைய ஊழலை மறைப்பதற்காக; திறமையின்மையை மறைப்பதற்காக மாற்றப்பட்டு இருக்கிறதே தவிர, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மாற்றம் அல்ல'' என்றார்.

 

 

Next Story

அமைச்சரின் பதவி மாற்றம்; மொத்தக் கூட்டத்தில் ஒற்றை 'மாஸ்க்'

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

PTR

 

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக  டி.ஆர்.பி.ராஜா இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்பொழுது புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது.

 

தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்ற பின் ஆளுநருடன் அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தில் அமைச்சர் பி.டி.ஆர் மட்டும் மாஸ்க் (முகக்கவசம்) அணிந்திருந்தார். இது சிலரின் கவனத்தை ஈர்த்தது. இது எதிர்ப்பின் அல்லது அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் 'தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். புதிதாக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு வாழ்த்து. நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி' என பி.டி.ஆர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.