Skip to main content

’நான் அதிர்ஷ்டசாலி...’ -பிரதமர் மோடி

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட அகமதாபாத் ராணிப்பில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார்.   

 

m

 

அகமதாபாத்தில் வாக்களித்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  என் தாய்வீடான குஜராத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது சொந்த மாநிலமான குஜராத்தில்  வாக்களித்துள்ளதால் நான் அதிர்ஷ்டசாலி ஆகியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.  

 

m

 

அவர் மேலும்,  நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.  தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.   

வெடிகுண்டை (IED) விட வலிமையானது வாக்காளர் அட்டை.   பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டை.   வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்.   கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல் வாக்களிப்பதன் மூலம் வாக்காளர்கள் அதை உணரமுடியும் என்று தெரிவித்தார்.

 

m

 

முன்னதாக காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார்.  மோடி வாக்களிக்க வந்ததை முன்னிட்டு குஜராத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மனு அளித்த பாரிவேந்தர் எம்.பி.!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Parivendar MP who met Prime Minister Narendra Modi in person and submitted the petition!

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அரியலூர், நாமக்கல் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார். 

 

பிரதமர் நரேந்திர மோடியை இன்று (30/03/2022) நேரில் சந்தித்த பாரிவேந்தர் எம்.பி., நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அவர் அளித்த மனுவில், தனது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போதிய ரயில்வே வழித்தடங்கள் இல்லாததால், தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் வரை 108 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதை அமைப்பதற்கான கள ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக, தமிழக முதலமைச்சருடன் கடந்த மார்ச் 6- ஆம் தேதி அன்று ஆலோசித்தபோது, அந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தார். சுதந்திரமடைந்த இந்நாள் வரை பெரம்பலூர் பகுதியில் ரயில்வே வழித்தடம் இல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

 

Next Story

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Tamil Nadu Chief Minister MK Stalin's letter to Prime Minister Narendra Modi!

 

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/11/2021) கடிதம் எழுதியுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று (01/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக் கோரி இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01/11/2021) கடிதம் எழுதியுள்ளார். 

 

அக்கடிதத்தில், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், 2021 - 2022ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூபாய் 3,524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15/09/2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதன் பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 01/11/2021 அன்றுள்ளவாறு 1,178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.