Advertisment

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Prime Minister Modi's Tribute at Mahatma Gandhi Memorial

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக்கொண்டாடப்பட உள்ளது.

நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், போலீசார் என ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தரும் பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதையடுத்துபிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத்தெரிவித்து உரையாற்ற உள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe