Advertisment

'தினம் ஒரு சாதனை'-பிரதமர் மோடி பெருமிதம்!

Prime Minister Modi proud!

Advertisment

'கரோனாவுக்கு எதிரான ஒரே பேராயுதம் தடுப்பூசியே' என்ற நோக்கில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் மூலமும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''கரோனாவுக்கு எதிரான இந்த போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது முறை வரும்போது நாம் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். யாருக்காவது தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களையும் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலத்தில் கரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

corona virus modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe